செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / திருநெல்வேலி கல்லூரி மாணவி கடத்தல்: திசையன்விளை இளைஞர் கைது

திருநெல்வேலி கல்லூரி மாணவி கடத்தல்: திசையன்விளை இளைஞர் கைது

திருமணம் செய்வதாகக் கூறி, கல்லூரி மாணவியை கடத்தியதாக திசையன்விளையில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திசையன்விளை மன்னார்ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லிங்கத்துரை (20). சேலத்தில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.

இவரும், இதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பிவில்லையாம். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. புகாரின்பேரில், திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருமணம் செய்வதாக தெரிவித்து மாணவியை லிங்கத்துரை கடத்தி சென்றது தெரியவந்தது.

மாணவியுடன் நின்றிருந்த லிங்கத்துரையை போலீஸார் கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

நன்றி: தினமணி

About Eesu

Check Also

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன