Breaking News

Monthly Archives: பங்குனி 2018

திருவனந்தபுரம் - ஆற்றங்கரை பேருந்து வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க கோரிக்கை

திருவனந்தபுரத்திலிருந்து ஆற்றங்கரை வரை இயக்கப்படும் பேருந்தை திசையன்விளை வரை நீட்டித்து இயக்க தமிழக – கேரள முதல்வர்களுக்கு திசையன்விளை பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திசையன்விளை பயணிகள் நலச் சங்கம் சார்பில், அதன் தலைவர் சாலமோன் ஜவஹர், செயலர் பிரைட், பொருளாளர் வசந்தன் ஆகியோர் தமிழகம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள், போக்குவரத்து துறை அமைச்சர்கள், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். அதில், …

Read More »

ராதாபுரம் அருகே தேங்காய் நார் தொழிற்கூடத்தில் தீ விபத்து

ராதாபுரம் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்கூடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ராதாபுரத்தில் இருந்து சமூகரெங்கபுரம் செல்லும் சாலையோரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்கூடம் அமைந்துள்ளது. இந்த தொழிற்கூடத்தில் தேங்காய் நெட்டில் இருந்து துப்பு தயாரித்து பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்பி வருகின்றனராம். இந்த தொழிற்கூடத்தில் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த சேர்மகனி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை பிற்பகல் இந்த தொழிற்கூடத்தில் வெல்டிங் வேலை …

Read More »

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சலுகை

பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிஎஸ்என்எல், திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை ரூ. 510-க்கு சி-டாப்அப், வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்அப்-களுக்கு ரூ. 550 எஸ்ட்ரா டாக்டைம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக புதிய தரைவழி இணைப்புத் திட்டத்தை உலடஉதஐஉசஇஉ (கக)-49 என்ற பெயரில் ரூ. 49 …

Read More »

சாத்தான்குளம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் நோபுள்ராஜ், துணைமுதல்வர் சந்தனக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சிபி ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமையாசிரியர் பங்கராஸ் வரவேற்றார். இதில் மாணவர், மாணவிகள் தயாரித்த ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் …

Read More »

திருநெல்வேலி கல்லூரி மாணவி கடத்தல்: திசையன்விளை இளைஞர் கைது

திருமணம் செய்வதாகக் கூறி, கல்லூரி மாணவியை கடத்தியதாக திசையன்விளையில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திசையன்விளை மன்னார்ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லிங்கத்துரை (20). சேலத்தில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரும், இதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பிவில்லையாம். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. …

Read More »

தாயின் கவனக்குறைவால் 6 மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

கணவனுடன் பைக்கில் பயணம் செய்த பெண், கவனக் குறைவாக இருந்ததால் அவரது சேலை பைக் சக்கரத்தில் சுற்றி விபத்து ஏற்பட்டது. இதில் 6 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேல பண்டாரகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். சரவணன், தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் 6 மாத கைக்குழந்தையான மோனிஷா ஆகியோருடன் பைக்கில் வள்ளியூரில் …

Read More »

வள்ளியூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வள்ளியூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராதாபுரத்தை அடுத்த சமூகரெங்கபுரம் அருகே உள்ள ஈணன்குடியிருப்பைச் சேர்ந்த நாராயணன் மகன் ரவிக்குமார் (34). இவர் மீது மணல் கடத்தல், கத்தியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதையடுத்தது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக ரவிக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய …

Read More »

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி:10 வயது சிறுவன் பரிதாப பலி

உடுமலை:உடுமலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். இதில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்கேசவன், 43; பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலன்பட்டியில், பலகாரக்கடை கடை நடத்தி வருகிறார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், உடுமலையைச் சேர்ந்த சுதாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார்.உடுமலை ஏரிப்பாளையத்தில் குடியிருந்து வரும் இவர்களுக்கு, 10 மற்றும் ஆறு வயதில் …

Read More »

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி:10 வயது சிறுவன் பரிதாப பலி

உடுமலை;உடுமலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். இதில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்கேசவன், 43; பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலன்பட்டியில், பலகாரக்கடை கடை நடத்தி வருகிறார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், உடுமலையைச் சேர்ந்த சுதாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார்.உடுமலை ஏரிப்பாளையத்தில் குடியிருந்து வரும் இவர்களுக்கு, 10 மற்றும் ஆறு வயதில் …

Read More »