Breaking News
Home / ragavan

ragavan

கார் கவிழ்ந்து முதியவர் சாவு

பாளையங்கோட்டை அருகே கார் கவிழ்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (72). இவரது மகன் பார்வதிமுத்து (36). இவர் கோவையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், திசையன்விளையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாராயணன், பார்வதிமுத்து, அவரது மகன் தீனதயாளன் உள்ளிட்டோர் காரில் சனிக்கிழமை திசையன்விளை வந்தனர். நிகழ்ச்சி …

Read More »

சுந்தரனார் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, பணக்குடி, திசையன்விளை, புளியங்குடி, நாகம்பட்டியில் உள்ள சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதேபோல கடையநல்லூர், சாத்தான்குளம், நாகலாபுரம், கன்னியாகுமரியில் உள்ள பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளிலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் …

Read More »

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி’ நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி‘ என்று நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிரசாரம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 16 தொகுதிகளில் அவர் வேன் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார். நேற்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார …

Read More »

சுடுமண்ணை வாயில் திணித்து கணவர் துன்புறுத்தியதாக பெண் புகார்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29). இவரது மனைவி சங்கீதா(26). இவர்களுக்கு 13.9.2007-ல் திருமணம் நடைபெற்றது. துர்காதேவி(8), ராஜதேவிகா(7), முத்துசந்தோஷ்(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ரமேஷ்குமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி தனது கணவர் தன்னை மிகவும் அடித்து, துன்புறுத்தியதாக வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் …

Read More »

மனதை செம்மையாக்கும் மனோன்மணீஸ்வரர் : விஜயநாராயணம்

விஜயநாரயணம் மனோன்மணீஸ்வர் ஆலயம் பஞ்ச கயிலாயத்தில் கடைசி க்ஷேத்ரமாக போற்றப்படுகிறது. கயிலையில் பார்வதி தேவி உலக நலத்திற்காகச் சிவபெருமானைத் தியானித்தார். தனது கையில் வைத்திருந்த 1008 தாமரைப் புஷ்பங்களை பூமியில் தூவினாள். அந்த புஷ்பங்களைச் சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடங்களெல்லாம் 1008 சிவக்ஷேத்ரங்களாக போற்றப்படுகின்றன. இதில் 74வது க்ஷேத்ரமாக மனோன்மணி என்னும் லிங்கம் அமைந்த விஜயநாராயணம் போற்றப்படுகிறது. …

Read More »

திசையன்விளையில் இளம்பெண் மாயம்

திசையன்விளை அருகே இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் பவானி(20). இவர் கடந்த 26ம் தேதி திசையன்விளையில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற பவானி பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கலாராணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் …

Read More »

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது லாரி, ஜேசிபி பறிமுதல்

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், எஸ்.ஐ.மதிபாலன் மற்றும் போலீசார் நம்பியாற்றில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட அணைக்கரையை சேர்ந்த எட்வின்(29), …

Read More »

சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 1,100 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில், உறுப்புக் கல்லூரி மாணவர்கள் 1,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளான திசையன்விளை, சேரன்மகாதேவி, புளியங்குடி, சங்கரன்கோவில், நாகபட்டி மற்றும் கடையநல்லூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம், நாகலாபுரம் உறுப்புக் கல்லூரிகளில் பயின்ற மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பல்கலைக் கழக துணை வேந்தர் கி. பாஸ்கர், மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினார். உறுப்புக் கல்லூரி …

Read More »

தோல்வி பயத்தில் ஜாதி கலவரத்தை தூண்ட வைகோ சதி

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் போட்டியிடாதது அவரது சொந்த விருப்பம். ஆனால் ஜாதி ரீதியாக அவர் சொல்லியிருக்கும் காரணம், தமிழக தேர்தல் அரசியலை சற்று தரம் தாழ்த்திவிட்டது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது சுற்றுப்பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதின் மூலம், தமிழக தேர்தல் பிரசாரத்தின் போக்கு மாறியிருக்கிறது. திமுக ஆதரவு எழுச்சியாக வெளிப்படுகிறது. ஸ்டாலின் சுற்றுப்பயணம் உயிரோட்டமாக …

Read More »

மிக இளம்வயது வேட்பாளரை நெல்லை மாவட்டத்தில் களமிறக்கிய அதிமுக- பயோடேட்டா

நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ல் போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் பதவிகளை வகித்தவர். செல்வமோகன் தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ். செல்வமோகன் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். 1989- முதல் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2010 முதல் தென்காசி தொகுதி …

Read More »