Breaking News

திசையன்விளையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

திசையன்விளையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

திசையன்விளை பேரூராட்சியில் ரூ.5.1 கோடியில் ரோடுகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறைக்கு ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கும் மற்றும் 4 ஆண்டு கால சாதனையை விளக்கியும் திசையன்விளை பஸ் நிலையம் முன்பு அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரசு வக்கீல் பழனிசங்கர், நகர ஜெ பேரவை செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் வீரபாண்டி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுடலைமணி வரவேற்றார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் யூனியன் தலைவர் ஜெகதீஸ், தலைமை பேச்சாளர் கருணாநிதி பேசினர்.

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன