Breaking News

Monthly Archives: August 2016

திசையன்விளை அருகே பயங்கரம் அரிசி வியாபாரி மனைவியை கட்டிப் போட்டு 30 பவுன் நகைகள், ரூ.1.10 லட்சம் கொள்ளை நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் 3பேர் வீடுபுகுந்து அட்டகாசம்

திசையன்விளை அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து அரிசி வியாபாரி மனைவியை கட்டிப் போட்டு ரூ.61 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள், ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 3 முகமூடி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். மொத்த அரிசி வியாபாரி நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள முதுமொத்தன்மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது65). வியாபாரி. இவருடைய மனைவி ஜெயராணி. இவர்களது மகன் முத்துவேல்(27). இவருடைய மனைவி …

Read More »

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி திரளான பெண்கள் கலந்து கொண்டனர்

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் கொடை விழா நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று காலையில் தொடங்கியது. இந்த கொடைவிழா வருகிற 26–ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. கோலப்போட்டி கொடை விழாவையொட்டி …

Read More »

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., டெல்லியில் திடீர் மாயம்?

சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா டெல்லியில் திடீரென்று மாயமனார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தூத்துக்குடி நகராட்சி மேயர், மகளிர் அணி தலைவி, மாநிலங்களவை எம்பி என்று தொடர்ந்து பல்வேறு பதவிகளைப் பெற்று அசுர வளர்ச்சி பெற்று வந்த, சசிகலா புஷ்பா, டெல்லி விமானநிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கினார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை …

Read More »

திசையன்விளை அருகே உள்ள சசிகலா புஷ்பா எம்.பி. வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

திசையன்விளை அருகே உள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திசையன்விளை: டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக நியமிக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. இவர் நேற்று டெல்லி மேல்-சபையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்து பேசினார். இதற்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டது. இதை அறிந்த …

Read More »