திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி சாந்தகுமாரி (40). இவர், தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொருள் வாங்குவது போல் நடித்து சாந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
நன்றி: தினமணி