திசையன்விளை, : திசையன்விளை வடக்கு தெரு சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழாவில் நேற்று மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி நடந்தது. கொடை விழாவின் 4ம் நாள் விழாவான நேற்று காலை சீவலப்பேரியில் இருந்து கொண்டு வந்த புனித நீரில் கும்பாபிஷேகம் நடந்தது. சமய சொற்பொழிவு, சுவாமிக்கு மாக்காப்பு பூஜையும், தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடந்தது.
நேற்று காலை மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, கம்ப்யூட்டர் போட்டியும், தொடர்ந்து வில்லிசை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி குங்குமம் பாஸ்கர் மற்றும் வரிதாரர்கள் செய்துள்ளனர்.
நன்றி: தினகரன்
