Breaking News

திசையன்விளை சந்தையில் கருவாடு விலை உயர்வு

dried-fish

மீன்பிடி தடைகாலத்தால் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் கருவாடுகளின் விலை அதிகரித்துள்ளது.

திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் இருந்து கருவாடுகள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கருவாடுகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நன்றி :- புதிய தலைமுறை தொலைக்காட்சி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply