Breaking News

Recent Posts

பைக் மீது வேன் மோதி 2 தலையாரிகள் பலி -திசையன்விளை

கூடங்குளம் அருகே பைக் மீது  வேன் மோதியதில்  2 தலையாரிகள் உடல் நசுங்கி பலியாகினர். நெல்லை  மாவட்டம் உவரியை சேர்ந்தவர் அருள்லிங்கம் (48). இவர் கூடங்குளத்தில்  தலையாரியாக வேலை பார்த்து வந்தார். இவரும், செட்டிகுளத்தில் தலையாரியாக பணிபுரியும் திசையன்விளை அருகே புலிமான்குளத்தை  சேர்ந்த வேல் என்பவரும் நேற்று காலை  பைக்கில் உவரியில் இருந்து கூடங்குளத்திற்கு கடற்கரை சாலை வழியாக  சென்றனர். கூடங்குளம் அருகே சென்ற போது மின்னல் வேகத்தில் பின்னால் …

Read More »

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 23–ந் தேதி தொடங்குகிறது

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது. சுடலை ஆண்டவர் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுடலை ஆண்டவர் கோவில்களில் ஒன்றாக திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் விளங்கி வருகிறது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 8 …

Read More »

தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய திட்டக்குழு ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி ராதாபுரம், திசையன் விளை, நாங்குநேரி, சாத்தான் குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தை, கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தை நான்கு …

Read More »

திசையன்விளையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

திசையன்விளை பேரூராட்சியில் ரூ.5.1 கோடியில் ரோடுகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறைக்கு ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கும் மற்றும் 4 ஆண்டு கால சாதனையை விளக்கியும் திசையன்விளை பஸ் நிலையம் முன்பு அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரசு வக்கீல் பழனிசங்கர், நகர ஜெ பேரவை செயலாளர் ஜெயக்குமார், …

Read More »

செல்போனில் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி திருமணமான பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

திசையன்விளை நெல்லை மாவட்டம் திசையன்விளை நெடுஞ்சாலை தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முரளி (வயது 19). இவர் காமராஜர் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தனர். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் …

Read More »