திசையன்விளை அருகே இளம்பெண் மாயமானார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் பவானி(20). இவர் கடந்த 26ம் தேதி திசையன்விளையில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற பவானி பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கலாராணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி: தினகரன்
