Breaking News

Monthly Archives: வைகாசி 2015

கருப்பட்டி தயாரிப்பு, விலை மற்றும் பயன்கள்

கருப்பட்டி விலை 1 கிலோ- 150/- ரூபாய் பயன்கள்: பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். …

Read More »

திசையன்விளை பஸ் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டம்

புதன், மே 20,2015 திசையன்விளை செல்லும் பஸ் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் வரவில்லை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திசையன்விளை, சாத்தான்குளம், பேய்குளம், முனைஞ்சிப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களுக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முகூர்த்தநாள் என்பதால் வழக்கத்தைவிட, புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திசையன்விளைக்கு செல்லும் …

Read More »

கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

ராதாபுரம் வியாழன் , மே 14,2015: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் நேற்று முதல் மீண்டும் மின்பத்தி தொடங்கியது. கோளாறு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில், தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலாவது அணு உலையில் …

Read More »

திசையன்விளையில் தொடர் மழை எதிரொலி: முருங்கைக்காய் விலை கிடு கிடு உயர்வு

திசையன்விளை, மே.15– திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள குரூஸ், அழகி, யாழ்பாணம், செடிரக முருங்கைகாய்கள் அமெரிக்கா, லண்டன், கனடா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு ஒரு கிலோ முருங்கைக்காய் அதிகபட்சமாக ரூ.48 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதிகவிலை கிடைக்கும் என கூடுதலாக முருங்கை பயிரிட்டு உள்ளனர். முருங்கைக்காய் அமோக விளைச்சல் …

Read More »

திசையன்விளை சந்தையில் கருவாடு விலை உயர்வு

மீன்பிடி தடைகாலத்தால் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் கருவாடுகளின் விலை அதிகரித்துள்ளது. திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் இருந்து கருவாடுகள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கருவாடுகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நன்றி :- புதிய தலைமுறை தொலைக்காட்சி

Read More »

மணிநகரில் இந்து முன்னணி மாநாடு

தட்டார்மடம் அருகே உள்ள மணிநகரில் இந்து முன்னணி மாநாடு விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. ஒன்றிய தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சுந்தரவேல் வரவேற்றார். மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், மாநில பேச்சாளர் மணிவாசகம், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேலன், ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துலிங்கம் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் வெட்டும் பெருமாள், துணை தலைவர்கள் சக்திவேல், இசக்கிமுத்து, பொருளாளர் கணபதி, நகர தலைவர் …

Read More »

சாத்தான்குளம் அருகே ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் ரூ.8லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு காந்திநகரை சேர்ந்தவர் தாமஸ் கனிஸ்யூதாஸ் (வயது 62). இவர் திசையன்விளையில் டூ வீலர் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி ஜெயமேரி. நேற்று காலை கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு உவரி அந்தோணியார் கோவிலுக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த 2பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ …

Read More »