திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தாலும்கூட திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து இம்மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., …
Read More »நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
நெல்லை, நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி பணகுடி, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி, திசையன்விளை, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூலைக்கரைப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஊர்களுக்கு இன்று மின்தடை செய்யப்படுகிறது. பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், …
Read More »சுகாதார கேடுகளால் வள்ளியூரில் சீரழிந்து வரும் சந்தை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு
வள்ளியூரில் காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளால் கசங்கி கந்தலாக சுகாதார கேடுடன் காட்சியளிக்கும் சந்தையால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சரித்திரத்தோடு தொடர்புகொண்ட வள்ளியூர் சமீபகாலமாக சந்தித்து வரும் பெரும் குறை சுகாதார கேடு. போதிய வாறுகால்கள், கழிவுநீரோடைகள் இல்லாததாலும், ஓடை, கால்வாய்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாலும் நகரம் நரகமாக மாறி வருகிறது. நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இவ்வூரில் நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், …
Read More »வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.19¾ லட்சம் மோசடி மேலாளருக்கு வலைவீச்சு
வள்ளியூர், வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.19¾ லட்சம் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். கிளை மேலாளர் நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர், கருவளையான் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் வள்ளியூர் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் கொடுத்து அந்த பணத்தை …
Read More »சசிகலா புஷ்பா ஆதரவாளர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சகோதரிகளான பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும், சசிகலா புஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில், பணிப் பெண்களுக்கு ஆதரவாக வாதாடி வந்த திசையன்விளையைச் சேர்ந்த வழக்குரைஞர் …
Read More »பகவதிஅம்மன் கோயிலை இடிக்க முயற்சி; இந்துமக்கள் கட்சியினர் போராட்டம்
திருநெல்வேலி : திசையன்விளையில் உள்ள பகவதியம்மன் கோயிலை இடிக்க முற்படும் கும்பலை கண்டித்து இந்துமக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே விஸ்வநாததாஸ் நகர் உள்ளது. இந்து இந்து மருத்துவர் சமூகத்தினருக்காக அரசு கட்டிகொடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். அங்கு பல ஆண்டுகளாக வழிபட்டுவரும் பகவதிஅம்மன் கோயிலை இடிக்க சிலர் முயற்சித்துள்ளனர்.இது தொடர்பாக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோயிலை இடிக்க …
Read More »திசையன்விளை அருகே வினோதம் செல்லப்பிராணிக்கு நினைவஞ்சலி கடைபிடித்த கிராம மக்கள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன
திசையன்விளை, திசையன்விளை அருகே செல்லப்பிராணிக்கு கிராம மக்கள் ஊர் கூடி நினைவஞ்சலி கடைபிடித்தனர். இதையொட்டி நினைவஞ்சலி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. திசையன்விளை அருகே நடந்த இந்த வினோத நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:– நினைவு நாள் கடைபிடிப்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் செல்லமாக வளர்த்து வந்த டாமி என்ற நாய், கடந்த ஆண்டு நவம்பர் 30–ந் தேதி மரணம் …
Read More »சென்னை ‘டாமி’க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி
சென்னை ‘டாமி’க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், வேலூரில் குரங்கை உயிரோடு எரித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வாழும் தமிழகத்தில்தான் இந்த கல்யாண சுந்தரம் வாழ்கிறார் என்றால் மனிதநேயம் மரணிக்கவில்லை என்றே கூற வேண்டும். நெல்லை மாவட்டம், திசையன்விளை, அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். டிரைவரான இவர், செல்லமாக வளர்த்த நாய்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலியை இன்று …
Read More »சசிகலா புஷ்பா ஆதரவாளர் கைது
பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப் பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளரான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஹரி நேற்று நெல்லை யில் கைது செய்யப்பட்டார். சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திரு நெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த பணிப்பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்த னர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக …
Read More »திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை? அழுகிய நிலையில் உடல் மீட்பு
திசையன்விளை: திசையன்விளை அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் பிணமாக கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்துள்ளது அப்புவிளை கிராமம். இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் கிராமச் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் முருங்கைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் சொந்தக்காரர் பராமரிப்பு பணிக்காக …
Read More »