Breaking News

நிகழ்வுகள்

அனைத்துவிதமான தினசரி நிகழ்வுகள் உங்களுக்காக!

மயில் கூட்டத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

நெல்லை: வறட்சி காரணமாக வெளியேறிய மயில்கள்,பருவமழையை தொடர்ந்து மீண்டும் கூட்டம் கூட்டமாக கிராம பகுதிகளுக்கு திரும்பி வருவதைக்கான ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் எங்கு பார்த்தாலும் வறட்சியாக காணப்பட்டதாலும், நிலங்களில் பயிர் விளைச்சல் இல்லாததாலும் மயில்கள் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. xஇந்நிலையில் மழை …

Read More »

நெல்லை மாவட்டத்திற்கு 47 திட்டங்கள் அறிவிப்பு: புதிய வருவாய் வட்டமாக மாறுகிறது திசையன்விளை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 47 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்ஒரு பகுதியாக திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் 240 அடுக்குமாடி …

Read More »

நெல்லை அருகே பயங்கர சம்பவம்: சென்னை வாலிபர் தலை துண்டித்து கொலை

திசையன்விளை: நெல்லை அருகே தலையை துண்டித்து சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் (27). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக், ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை …

Read More »

நெல்லை அருகே இன்று அதிகாலை பயங்கரம்: இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை

திசையன்விளை: திசையன்விளை அருகே இன்று அதிகாலை நடத்தை சந்தேகத்தில் இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கணவர் போலீசில் சரணடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால்(37) பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் கரைசுத்துபுதூர் அருகே உள்ள ராஜம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(56) மகள் பொன்இசக்கி(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரசாந்த்(7) என்ற மகனும், செல்வரோஜா(6) என்ற மகளும் …

Read More »

சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு: ஜூன் 5க்கு ஒத்திவைப்பு

மதுரை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.,யின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு: எங்கள் வீட்டில் வேலை செய்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சி ராணி புகாரின்படி, துாத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் போலீசார் 2016ல் என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிந்தனர். வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக, எங்களுக்கு …

Read More »

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண் விற்பனை குழு வேண்டுகோள்

நெல்லை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் விற்பனை குழு கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவிதமான பிடித்தமும் கிடையாது இதுதொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நெல்லை விற்பனைக்குழு செயலாளர் டி.விஷ்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம், திசையன்விளை …

Read More »

பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு

நெல்லை, பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், “நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கென்னடி, சலேட்ராஜா, வின்சென்ட், சாகர், கிளவுடின், இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், அந்தோணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 …

Read More »

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 27–ந் தேதி நடக்கிறது

திசையன்விளை, திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தரங்கரை பள்ளிவாசலில் உள்ள ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து …

Read More »

குடிகார கணவன் தகராறு மனைவி, மகள் தற்கொலை

திருநெல்வேலி, குடிகார கணவர் தகராறு செய்ததால் மனைவி, மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.திருநெல்வேலி, திசையன்விளை அருகே வீரணன்சேரியை சேர்ந்தவர் விஜயகுமார் 30.இவரது மனைவி மகாலட்சுமி 28. காதல் திருமணம் செய்துகொண்டனர். விஜயா 9, திவ்யா 8, வெங்கடேஷ் 4 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவாராம். வீட்டில் வளர்த்த மாட்டை, மகாலட்சுமி விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை கேட்டு விஜயகுமார் தகராறுசெய்துள்ளார். …

Read More »

இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்– பரபரப்பு தகவல்கள்

இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாயின. காதல் திருமணம் நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரத்தை அடுத்த வீரணாஞ்சேரியைச் சேர்ந்தவர் பெருமாள். மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தைச் …

Read More »