Breaking News

நிகழ்வுகள்

அனைத்துவிதமான தினசரி நிகழ்வுகள் உங்களுக்காக!

தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய திட்டக்குழு ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி ராதாபுரம், திசையன் விளை, நாங்குநேரி, சாத்தான் குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தை, கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தை நான்கு …

Read More »

திசையன்விளையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

திசையன்விளை பேரூராட்சியில் ரூ.5.1 கோடியில் ரோடுகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறைக்கு ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கும் மற்றும் 4 ஆண்டு கால சாதனையை விளக்கியும் திசையன்விளை பஸ் நிலையம் முன்பு அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரசு வக்கீல் பழனிசங்கர், நகர ஜெ பேரவை செயலாளர் ஜெயக்குமார், …

Read More »

செல்போனில் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி திருமணமான பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

திசையன்விளை நெல்லை மாவட்டம் திசையன்விளை நெடுஞ்சாலை தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முரளி (வயது 19). இவர் காமராஜர் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தனர். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் …

Read More »

உடன்குடி பள்ளி வளாகத்தில் பரிதாபம் பள்ளிக்கூட பஸ் மோதி சிறுமி பலி சாலை மறியல்–வாகனங்கள் உடைப்பு

உடன்குடி உடன்குடி பள்ளிக்கூட வளாகத்தில், பள்ளிக்கூட பஸ் மோதியதில் 4 வயது சிறுமி பலியானாள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வாகனங்களை உடைத்தனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– 4 வயது சிறுமி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் பஞ்சாயத்து மருதூர்கரையைச் சேர்ந்தவர், பட்டாணி செல்வன். இவர் தனது வீட்டின் முன் மளிகை கடை நடத்தி வருகிறார். மீன் …

Read More »

திசையன்விளையில் லாரிகளில் இருந்து விழும் கற்களினால் விபத்து ஏற்படும் அபாயம்

திசையன்விளை திசையன்விளையில் லாரிகளில் இருந்து விழும் கற்களினால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தூண்டில் வளைவு அமைக்கும் பணி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ராட்சத கற்கள் லாரியில் ஏற்றப்பட்டு திசையன்விளை பஜார் வழியாக உவரிக்கு கொண்டு …

Read More »

குட்டத்தில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை பறிப்பு

திசையன்விளை குட்டம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி சரஸ்வதி(50). இவர் வீட்டையொட்டி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் கடையில் இருந்த போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு வாலிபர்கள் தண்ணீர் பாக்கெட் கேட்டுள்ளனர். சரஸ்வதி எடுத்துக் கொடுத்த போது ஒருவர் அவர் அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐந்தேகால் பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் …

Read More »

கலாம் மறைவுக்கு அஞ்சலி திசையன்விளையில் மவுன ஊர்வலம்

திசையன்விளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து திசையன்விளையில் அனைத்து கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி ஜேம்ஸ்ரோடு, பேரூராட்சி அலுவலகம், மெயின்பஜார், பழைய பேரூந்து நிலைய ஜங்சன், போஸ்ட்ஆபீஸ், பால்கனி மருத்துவமனை ரோடு, பேரூந்து நிலையம், உடன்குடிரோடு வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அப்துல்கலாம் பற்றிய நினைவுகளுடன் …

Read More »

எப்போதும் பரிசு உண்டு ஜோன்ஸ்டா கிரேஷியா

திசையன்விளை இயற்கைக் காட்சிகளைப் பார்த்ததுமே மனதுக்குள் ஓவிய ஒத்திகை நடத்திவிடுவார் ஜோன்ஸ்டா கிரேஷியா. வீட்டுக்கு வந்ததும் வண்ணங்களைக் குழைத்துத் தன் கற்பனைக்கு வடிவம் கொடுத்துவிடுவார். எம். டெக். முடித்திருக்கும் ஜோன்ஸ்டா, வேலை தேடுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறாரோ அதைவிட அதிக முனைப்புடன் ஓவியங்கள் வரைகிறார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருக்கும் இவரது வீட்டில் அடுக்கப்பட்டிருக்கும் ஓவியங்களே அதற்கு சாட்சி. “எங்க சொந்த ஊர் திசையன்விளை பக்கத்துல இருக்கற நாடார்உவரி. என்னோட …

Read More »

நான்கு பேரை கொலை செய்ய முயற்சி ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை

ஜூலை 22, 2015 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர், பூச்சிக்காடு பகுதியில் நான்கு பேரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 ஆண்டு ஜெயில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கூடுதல் செசன்சு கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம் அரசூர், பூச்சிக்காடு பகுதியில் 2013 ல் கோயில் திருவிழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் சாமிரெட்டிகண்டிகை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கேசவன் மகன் ராகவன், 15, கோயில் திருவிழாவிற்காக …

Read More »

மணல் மேடால் திணறும் மணப்பாடு மீனவர்கள்- தூண்டில் பாலம் அமைக்க கோரிக்கை

ஜூலை 21, 2015 மணப்பாடு கடலில் திடீரென தோன்றிய மணல் மேடால் மீனவர்கள் படகை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மணப்பாடு கடல் எபபோதும் தென் பகுதியில் ஆவேசமாகவும், வடபகுதியில் அமைதியாகவும் காணப்படும். வருடத்தின் சில மாதங்கள் கடலின் வடபுறம் …

Read More »