கனமழையிலும் நிரம்பாமல் இருந்த திசையன்விளை அதிசய கிணறு தற்போது நிரம்பியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை காரணமாக காற்றாற்று வெள்ளப்பெருக்கில் திசையன்விளை அருகே உள்ள அதிசய கிணறு நிரம்பியது. நீரின் வேகம் காரணமாக சுற்று சுவர் சேதம் அடைந்துள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில்அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் …
Read More »Yearly Archives: 2023
தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை
நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் வறட்சி நிலையை நோக்கி போய்க்கொண்டு உள்ளன. அரசியல் ரீதியான ஆர்வம் (Political will) இல்லாததும், அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாததும், 3 தாலுகா மக்களை ஏமாற்றிவிட்டது.தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் …
Read More »நெல்லையில் ஆணவக்கொலை?… காதல் தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை… திசையன்விளையில் பரபரப்பு !!!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காதல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவ கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.ஹைலைட்ஸ்:நெல்லையில் பயங்கர சம்பவம் காதல் தகராறில் இளைஞர் கொலை ஆணவக்கொலையா என விசாரணை தனிப்படை அமைத்து தேடுதல்வேட்டைகாதல் விவகாரம்இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதாலும் குறிப்பாக இளைஞர் முத்தையா …
Read More »தண்ணீரை உள்வாங்குவதை நிறுத்திய திசையன்விளை அதிசய கிணறு: விவசாயிகள் கவலை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு தண்ணீரை உள்வாங்கியதை நிறுத்தியுள்ளது. இது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.ஆயன்குளத்திலுள்ள இந்த அதிசயக் கிணறு வெள்ளக் காலங்களில் பெருமளவுக்கு தண்ணீரை உள்வாங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. கடந்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் உபரி நீர் விநாடிக்கு 3,000 கன அடி இந்த கிணற்றுக்குள் சென்றது. பல நாட்களாக தண்ணீரை …
Read More »துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை
நெல்லை: வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவது கிடையாது, உண்மையாகவே வரலாறு காணாத மழையை எதிர் கொண்டு இருக்கிறது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள். 100 வயதான முதியவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை கூட, நாங்கள் பிறந்தது முதல் இதுவரை இப்படி ஒரு மழையை பார்த்தது கிடையாது என்பதுதான்.புயலே வந்தாலும் பெரிய மழையை பார்த்திராத.. வெயில் மட்டுமே வாழ்க்கை என்று இருக்கக்கூடிய பகுதிகள் இவை. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம், …
Read More »விடாது பெய்யும் பெருமழை.. 24 மணி நேரமாக இருளில் மூழ்கிய திசையன்விளை தாலுகா.. தொலைதொடர்பும் துண்டிப்பு
நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதால் பல …
Read More »திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:
திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முன்பாக அம்மாணவர்கள் ஏற்கெனவே பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13) , இசக்கியப்பன் மகன் ராகுல் (12) …
Read More »திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் முத்தையா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகாரில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முத்தையா ஜாதிய படுகொலை செய்யப்படவில்லை என்றும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகொலை செய்யப்பட்ட முத்தையா, சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார்; முத்தையாவின் உறவினரால் அப்பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது,இது தொடர்பாக …
Read More »