Breaking News

Recent Posts

சாத்தான்குளம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் நோபுள்ராஜ், துணைமுதல்வர் சந்தனக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சிபி ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமையாசிரியர் பங்கராஸ் வரவேற்றார். இதில் மாணவர், மாணவிகள் தயாரித்த ஸ்மார்ட் ரோபோ மற்றும் அறிவியல் …

Read More »

திருநெல்வேலி கல்லூரி மாணவி கடத்தல்: திசையன்விளை இளைஞர் கைது

திருமணம் செய்வதாகக் கூறி, கல்லூரி மாணவியை கடத்தியதாக திசையன்விளையில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திசையன்விளை மன்னார்ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லிங்கத்துரை (20). சேலத்தில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரும், இதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பிவில்லையாம். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. …

Read More »

தாயின் கவனக்குறைவால் 6 மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

கணவனுடன் பைக்கில் பயணம் செய்த பெண், கவனக் குறைவாக இருந்ததால் அவரது சேலை பைக் சக்கரத்தில் சுற்றி விபத்து ஏற்பட்டது. இதில் 6 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேல பண்டாரகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். சரவணன், தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் 6 மாத கைக்குழந்தையான மோனிஷா ஆகியோருடன் பைக்கில் வள்ளியூரில் …

Read More »

வள்ளியூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வள்ளியூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராதாபுரத்தை அடுத்த சமூகரெங்கபுரம் அருகே உள்ள ஈணன்குடியிருப்பைச் சேர்ந்த நாராயணன் மகன் ரவிக்குமார் (34). இவர் மீது மணல் கடத்தல், கத்தியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதையடுத்தது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக ரவிக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய …

Read More »

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி:10 வயது சிறுவன் பரிதாப பலி

உடுமலை:உடுமலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். இதில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்கேசவன், 43; பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலன்பட்டியில், பலகாரக்கடை கடை நடத்தி வருகிறார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், உடுமலையைச் சேர்ந்த சுதாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார்.உடுமலை ஏரிப்பாளையத்தில் குடியிருந்து வரும் இவர்களுக்கு, 10 மற்றும் ஆறு வயதில் …

Read More »