Breaking News

Recent Posts

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாயின் 3-ஆம் கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். தாமிரவருணி ஆற்றுடன் கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளநீர் கால்வாயில் முதல் 2 கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. 3-ஆம் கட்டப் பணிகள் நான்குனேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள …

Read More »

அதிமுக வழக்குரைஞரணி ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அணியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கே.எம்.எஸ். பீர்முகைதீன் தலைமை வகித்தார். கட்சியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை ந. கணேசராஜா, பகுதிச் செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் பி.எச். மனோஜ்பாண்டியன், சுதா கே. பரமசிவன், வழக்குரைஞர் …

Read More »

மரத்தில் லாரி மோதியது; வியாபாரி உள்பட 2 பேர் காயம்

இட்டமொழி அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் நெல் வியாபாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர். நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே பெரும்பனையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50), நெல் வியாபாரி.இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மினிலாரியில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூடைகளை பாவூர்சத்திரத்தில் இறக்கிவிட்டு லாரியில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். லாரியை இட்டமொழி அருகே உள்ள மனகாவலபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (40) ஓட்டினார். லாரி, இட்டமொழி அருகே …

Read More »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லை மாவட்டத்தில் ரயில், சாலை மறியல்: 555 பேர் கைது

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், உடனடியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை ரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ்.எஸ்.போஸ் …

Read More »

திசையன்விளை அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு

திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். நான்குனேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர் திசையன்விளை அருகில் உள்ள தச்சன்விளை கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை வேனில் ஊர் திரும்பினர். திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமம் அருகே எதிரே வந்த கார் வேனுடன் நேருக்கு நேர் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த …

Read More »