Breaking News

Recent Posts

சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 1,100 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில், உறுப்புக் கல்லூரி மாணவர்கள் 1,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளான திசையன்விளை, சேரன்மகாதேவி, புளியங்குடி, சங்கரன்கோவில், நாகபட்டி மற்றும் கடையநல்லூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம், நாகலாபுரம் உறுப்புக் கல்லூரிகளில் பயின்ற மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பல்கலைக் கழக துணை வேந்தர் கி. பாஸ்கர், மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினார். உறுப்புக் கல்லூரி …

Read More »

தோல்வி பயத்தில் ஜாதி கலவரத்தை தூண்ட வைகோ சதி

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் போட்டியிடாதது அவரது சொந்த விருப்பம். ஆனால் ஜாதி ரீதியாக அவர் சொல்லியிருக்கும் காரணம், தமிழக தேர்தல் அரசியலை சற்று தரம் தாழ்த்திவிட்டது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது சுற்றுப்பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதின் மூலம், தமிழக தேர்தல் பிரசாரத்தின் போக்கு மாறியிருக்கிறது. திமுக ஆதரவு எழுச்சியாக வெளிப்படுகிறது. ஸ்டாலின் சுற்றுப்பயணம் உயிரோட்டமாக …

Read More »

மிக இளம்வயது வேட்பாளரை நெல்லை மாவட்டத்தில் களமிறக்கிய அதிமுக- பயோடேட்டா

நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ல் போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் பதவிகளை வகித்தவர். செல்வமோகன் தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ். செல்வமோகன் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். 1989- முதல் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2010 முதல் தென்காசி தொகுதி …

Read More »

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் திசையன்விளை பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் என திசையன்விளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். பொதுக்கூட்டம் திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேருஜி கலையரங்கில் நடந்தது. ராதாபுரம் தொகுதி தலைவர் ஜெரால்டு வீரசந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்திரை வேல் வரவேற்றார். ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லொபினை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் …

Read More »

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. நீர் ஆதாரங்களில் உள்ள நீரைத் தனியார் குளிர்பான நிறுவனங்கள் பயன்படுத்துவது மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 2. திசையன்விளை பகுதிக்குத் தாமிரபரணி தண்ணீர் கொண்டுவரப்படும். 3. திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறு – ஜம்புநதி நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும். 4. இராமாநதி மேல்மட்டக்கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். 5. மணிமுத்தாறு – தெற்கு மெயின் ரீச் கால்வாய் – திருக்குறுங்குடி நம்பியாறு இணைப்புத் …

Read More »